×

தலைநகர் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு; மக்கள் அச்சம்..!!

டெல்லி: தலைநகர் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. பிற்பகல் 2.50 மணி அளவில், 220 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் லாகூர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், கைபர், பக்துன்குவா உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் வடமாநிலங்களில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த அதிர்வுகள் மேலும் சில மணி நேரங்கள் நீட்டிப்பதற்காக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரபூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

The post தலைநகர் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு; மக்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Mild ,northern states ,Delhi, Kashmir ,Delhi ,Kashmir ,Afghanistan ,Hindukush region ,Geological Survey Center ,
× RELATED வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட்...